sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலவச மின்சார பயன்பாடு கணக்கெடுப்பு: தோட்டக்கலை துறையினர் பரிதவிப்பு

/

இலவச மின்சார பயன்பாடு கணக்கெடுப்பு: தோட்டக்கலை துறையினர் பரிதவிப்பு

இலவச மின்சார பயன்பாடு கணக்கெடுப்பு: தோட்டக்கலை துறையினர் பரிதவிப்பு

இலவச மின்சார பயன்பாடு கணக்கெடுப்பு: தோட்டக்கலை துறையினர் பரிதவிப்பு

1


ADDED : செப் 02, 2024 01:58 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விவசாய தேவைக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின்சாரம் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை முடிக்க முடியாமல், தோட்டக்கலை துறையினர் தவித்து வருகின்றனர்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில், 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. நடப்பாண்டு, 50,000 புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில், பசுமை எரிசக்தி கழகம் வாயிலாக, 1,685 விவசாய மின் பாதைகளை, சோலார் மின் பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

இலவச விவசாய மின் இணைப்புகளை பெற்றவர்கள் பலர், அதை வேளாண் தேவைக்கு முழுமையாக பயன்படுத்துவதில்லை. மீன், இறால் பண்ணைகள், கிடங்குகள், சிறுதொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விதியை மீறி பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, விவசாய தேவைக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தின் பயன்பாட்டை கண்டறிய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், வேளாண் பொறியியல் பிரிவு பொறியாளர்கள், இதற்காக விவசாய நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும்.

இதுகுறித்த அறிக்கையை, இம்மாத இறுதிக்குள் தங்கள் தலைமை அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும். கணக்கெடுப்பின் போது விவசாய நிலம் தொடர்பான தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு, வருவாய் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. எனவே, இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என, வேளாண் துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு உள்ளனர்.

ஆனால், கணக்கெடுப்பு குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் கைவிரித்து வருகின்றனர். இதனால், கணக்கெடுப்பை முடிக்க முடியாமல், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறையினர் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us