sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போட அரசு முடிவு?

/

ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போட அரசு முடிவு?

ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போட அரசு முடிவு?

ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போட அரசு முடிவு?


ADDED : ஆக 20, 2024 01:20 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பல்வேறு பிரச்னைகளால், 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. சென்னையில் ஊரக உள்ளாட்சிகள் இல்லை.

வார்டு வரையறை


எனவே, 36 மாவட்டங்களில் 655 மாவட்ட கவுன்சிலர்கள், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 ஒன்றிய கவுன்சிலர்கள், 12,525 ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

வார்டு வரையறை பிரச்னை காரணமாக, கடந்த 2019ல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.

மீதமுள்ள 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டது.

அப்போது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2025 ஜன., 5ல் முடிகிறது. எனவே, டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தி, புதிய மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் ஏற்பாடுகளை செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் தேவை.

பல ஊராட்சிகளை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

எந்தெந்த ஊராட்சிகளை இணைப்பது என்ற ஆலோசனை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சிகள் இயக்குனரகம், நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்து வருகிறது.

ஆனால், ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதற்கு பல இடங்களில் மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் வாயிலாக, கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெற்று வருகின்றனர். நகரப் பகுதிகளுடன் இணைப்பதால், தங்கள் வேலைவாய்ப்பு பறிபோகும் என, மக்கள் அஞ்சுகின்றனர்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், கிராமப்புற வீடுகளுக்கு தனி குடிநீர் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

நகரப் பகுதிகளுக்கு சென்றால், குடிநீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்; வீட்டு வரியும் அதிகரிக்கும். முதல்வரின் திட்டத்தின் கீழ், சொந்த வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.

எதிர்ப்பு ஏன்?


நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைந்தால், இந்த திட்டப் பயன்களை பெற முடியாது என, கிராமப்புற மக்கள் கருதுவதே எதிர்ப்புக்கு காரணமாக உள்ளது.

மேலும், 2026 சட்டசபை தேர்தலை நோக்கி, ஆளுங்கட்சியின் பணிகள் துவங்கியுள்ளன. தேர்தலை சந்திப்பதற்கு, அமைச்சர்கள் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், கூட்டணி கட்சிகளுக்கு, 'சீட்' ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள, ஆளுங்கட்சி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதனால், 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை, டிசம்பர் மாதம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us