நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ADDED : ஜூன் 29, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பந்தலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 278 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜூன் 29) விடுமுறை என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.