sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க கோரி வழக்கு; உயர்நீதிமன்றம்  தள்ளுபடி

/

பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க கோரி வழக்கு; உயர்நீதிமன்றம்  தள்ளுபடி

பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க கோரி வழக்கு; உயர்நீதிமன்றம்  தள்ளுபடி

பழுதடைந்த அரசு பஸ்களை சீரமைக்க கோரி வழக்கு; உயர்நீதிமன்றம்  தள்ளுபடி


ADDED : பிப் 22, 2025 12:49 AM

Google News

ADDED : பிப் 22, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மோசமான நிலையில் உள்ளவற்றை சீரமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. சரியான நிர்வாகமின்மை, பராமரிப்பின்மை, ஊழலால் போக்குவரத்துக் கழகம் இழப்பை சந்தித்துள்ளது. தரம் குறைந்த உதிரி பாகங்கள் கொள்முதல் மூலம் முறைகேடு நடக்கிறது. அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மோசமான நிலையில் உள்ளவற்றை சீரமைத்து இயக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தரப்பு: பல புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழுதடைந்த பஸ்களை படிப்படியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனுதாரர் மேம்போக்காக பொத்தாம் பொதுவான காரணங்களைக்கூறி மனு செய்துள்ளார்.

இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: மனுதாரர் குறிப்பிடும் புகாருக்கு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us