sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆவின் பால் வினியோக வாகனம் டெண்டர் முறைகேடு வழக்கு ஆவணம் கோரும் உயர் நீதிமன்றம்

/

ஆவின் பால் வினியோக வாகனம் டெண்டர் முறைகேடு வழக்கு ஆவணம் கோரும் உயர் நீதிமன்றம்

ஆவின் பால் வினியோக வாகனம் டெண்டர் முறைகேடு வழக்கு ஆவணம் கோரும் உயர் நீதிமன்றம்

ஆவின் பால் வினியோக வாகனம் டெண்டர் முறைகேடு வழக்கு ஆவணம் கோரும் உயர் நீதிமன்றம்


ADDED : ஜூன் 06, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை ஆவினிலிருந்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை வினியோகிக்க வாகனங்களை இயக்க டெண்டர் கோரியதில், அதிக வாடகை நிர்ணயித்து முறைகேடு நடந்ததாக தாக்கலான வழக்கில், டெண்டர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை கோமதிபுரம் செல்லத்துரை தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை பூத்களுக்கு வாகனங்கள் வாயிலாக வினியோகிக்க 2023ல் டெண்டர் கோரப்பட்டது. வாகனங்களுக்கு வாடகையை ஆவின் வழங்குகிறது. சில வழித்தடங்களில் வினியோகிக்க என் பெயர் தேர்வு செய்யப்பட்டது. வாடகை விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து 10 சதவீதம் உயர்வுடன் வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டது. என்னைப்போல் சிலருக்கு வெவ்வேறு வழித்தடங்களுக்கு 10 சதவீத உயர்வுடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மற்ற 25 வழித்தடங்களில் வாகனங்களை இயக்க 20 முதல் 57 சதவீதம் வரை முறைகேடாக வாடகையை உயர்த்தி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஆவின் துவங்கிய காலத்திலிருந்து இல்லாத ஒன்று. தமிழகம் முழுவதும் வழித்தடங்களுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வாடகை உயர்வு வழங்கவில்லை.

சில அதிகாரிகள் சுயலாபத்திற்காக வாகன உரிமையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து வாடகையை உயர்த்தி, மதுரை ஆவினுக்கு 42 லட்சம் ரூபாய் நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளனர். 20 முதல் 57 சதவீதம் வாடகையை உயர்த்தி ஒப்பந்தம் இறுதி செய்து, 25 வழித்தடங்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மறு டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு ஆவின் மேலாண்மை இயக்குனர், கமிஷனர், மதுரை ஆவின் பொது மேலாளர், கலெக்டர் ஜூன் 20ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். டெண்டர் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us