ADDED : செப் 08, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன், தொழிலாளி. இவரது மனைவி தேவி 39; கணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், மனைவியின் ஸ்கூட்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
இதுகுறித்து தேவி கொடுத்த புகாரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.