sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம்?: ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

/

கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம்?: ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம்?: ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம்?: ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

1


ADDED : ஜூன் 08, 2024 03:24 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 03:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு அனுமதியளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, 2007ல் கோத்தகிரி ஊராட்சி தலைவராக இருந்த பொன்தோஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்தநீதிபதி,'எஸ்டேட்டில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை' எனக் கூறி நோட்டீசை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து,பொன்தோஸ் தரப்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜராகி, கோடநாடு எஸ்டேட்டில்சொத்து வரிவிதிப்பது தொடர்பாக ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி கேட்கப்படுகிறது. அப்போது தான், கூடுதல் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக என்ற களநிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும், என்றார்.

இதை ஏற்க மறுத்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன்,இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கோடநாடு எஸ்டேட்டில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அதிகாரிகள்நடுநிலையோடுஆய்வு நடத்தலாம். எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது' எனத் தெரிவித்து, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us