sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தகவல் ஆணையர்கள் வாய்மொழி உத்தரவு; தவறும் அதிகாரிகளால் மனுதாரர்களுக்கு சிக்கல்

/

தகவல் ஆணையர்கள் வாய்மொழி உத்தரவு; தவறும் அதிகாரிகளால் மனுதாரர்களுக்கு சிக்கல்

தகவல் ஆணையர்கள் வாய்மொழி உத்தரவு; தவறும் அதிகாரிகளால் மனுதாரர்களுக்கு சிக்கல்

தகவல் ஆணையர்கள் வாய்மொழி உத்தரவு; தவறும் அதிகாரிகளால் மனுதாரர்களுக்கு சிக்கல்


ADDED : ஜூலை 02, 2024 12:40 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தகவல் அறியும் உரிமை சட்டப்படி தாக்கலாகும், மேல் முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையில், தகவல் ஆணையர்கள் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிப்பதால், அதை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது, மனுதாரர்களால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு துறைகளின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களை, பொதுமக்கள் எளிதாக பெறலாம். இதற்கு, சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலருக்கு மனு செய்ய வேண்டும்.

மேல்முறையீடு


அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு, 30 நாட்களில் பதில் கிடைக்காவிட்டால், அவரின் மேலதிகாரியிடம் முதலாவது மேல் முறையீடு செய்யலாம். அவர் நிலையிலும் தகவல் கிடைக்காவிட்டால், மாநில தகவல் ஆணையத்தில் முறையிடலாம்.

இவ்வாறு வரும் இரண்டாவது மேல் முறையீடு மனுக்கள் தொடர்பாக, தகவல் ஆணையர்கள் விசாரணை நடத்தி, எழுத்துப்பூர்வ உத்தரவு கள் பிறப்பிக்க வேண்டும். தகவல் அளிக்க மறுக்கும் பொது அலுவலருக்கு, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தகவல் ஆணையர்களின் உத்தரவுகள், சில சமயங்களில் பொது அலுவலர்களுக்கு சாதகமாக இருந்தால், மனுதாரர்கள் நீதிமன்றம் செல்லலாம். இதற்கு எழுத்துப்பூர்வ ஆவணங்கள் சான்றாக இருக்க வேண்டும்.

தமிழக தகவல் ஆணையத்தில், வழக்கு விசாரணை விபரங்கள், உத்தரவுகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. இது, மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

தற்போதுள்ள தகவல் ஆணையர்களில் சிலர் வேண்டுமென்றே, வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது, தவறு செய்யும் அதிகாரிகள் தப்பிக்க உதவும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர், பி.கல்யாணசுந்தரம் கூறியதாவது:

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பாக, சில தகவல்களை கேட்டு இருந்தேன்.

எழுத்துப்பூர்வமாக இல்லை


காவல் துறையில் அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு தொடர்பான சில தகவல்களையும் கேட்டு மனு செய்தேன். தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வரும், இந்த தகவல்களை அளிக்க காவல் துறை மறுத்து வருகிறது.

இது தொடர்பான மேல் முறையீட்டை, தலைமை தகவல் ஆணையர் ஷக்கீல் அக்தர், சமீபத்தில் விசாரித்தார். அவர் பிறப்பித்ததாக எழுத்துப்பூர்வ உத்தரவுகள் எதுவும், மனுதாரரான எனக்கு வரவில்லை; ஆணைய இணையதளத்திலும் வெளியாகவில்லை.

ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்களிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில், தலைமை தகவல் ஆணையரின் உத்தரவு அடிப்படையில், இத்தகவலை அனுப்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்விக்குறி


சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்பு கொண்ட போது, வாய்மொழி உத்தரவு அடிப்படையிலேயே, இந்த கடிதங்களை அனுப்பியதாக கூறினர். இதுபோன்று பல்வேறு நிகழ்வுகளிலும் வாய்மொழி உத்தரவுகளை அவர் பிறப்பிப்பது தெரியவந்துள்ளது.

இதனால், வாய்மொழி உத்தரவை நிறைவேற்றாத அலுவலர் மீது, மனுதாரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.

தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளுக்கு மாறாக, தகவல் ஆணையர்கள் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிப்பதால், ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us