விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு
ADDED : செப் 05, 2024 09:45 PM

திருப்பூர்:ஹிந்து முன்னணி சார்பில் கொண்டாட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு, ஹிந்து முன்னணி சார்பில், 1.5 லட்சம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. மக்கள் தன் எழுச்சியாக வீடுகள் முன்பு, ஒன்றரை அடி, இரண்டடி என, 15 லட்சம் சிலைகளை வைத்து கொண்டாட உள்ளனர்.
திருப்பூரில், 4ம் நாளும், கோவையில், 5ம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறோம். இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் கொடுத்துள்ளோம். மற்ற மத பண்டிகை போல், ஹிந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதோடு, இதனையும் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளோம்.
திருப்பூர் மாவட்டத்தில், 1,500 இடங்களில், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளோம். திருப்பூரில் நடக்கும் நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் முருகன் பங்கேற்கிறார். ஆங்காங்கே சில இடங்களில் போலீசார் மூலம் சிலை வைக்க நெருக்கடி தரப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இரண்டு நாள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.