sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக அரசுக்கு நீர் முக்கியமா? பீர் முக்கியமா?: இ.பி.எஸ்., கேள்வி

/

திமுக அரசுக்கு நீர் முக்கியமா? பீர் முக்கியமா?: இ.பி.எஸ்., கேள்வி

திமுக அரசுக்கு நீர் முக்கியமா? பீர் முக்கியமா?: இ.பி.எஸ்., கேள்வி

திமுக அரசுக்கு நீர் முக்கியமா? பீர் முக்கியமா?: இ.பி.எஸ்., கேள்வி

10


UPDATED : மே 04, 2024 01:42 PM

ADDED : மே 04, 2024 01:04 PM

Google News

UPDATED : மே 04, 2024 01:42 PM ADDED : மே 04, 2024 01:04 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: 'திமுக அரசுக்கு குடிநீர் முக்கியம் இல்லை. பீர் தான் முக்கியம்' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் நடந்த பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது:

கேரளா பயணம் ஏதுக்கு?

ரகசிய பயணம் எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது. தமிழகத்தில் அரசு பஸ்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. புதிய பஸ்கள் வாங்குவதாக திமுக ஆட்சியில் பொய் கூறுகின்றனர். சென்னையில் மின்சார பஸ்களுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஸ்டாலினை சாடிய இ.பி.எஸ்.,

அதிமுக ஆட்சியில் தான் 14 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அரசு பஸ்களில் பயணிகள் மிகுந்த அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் துவங்கிய காரணத்தினால் நீர்வளத்திட்டங்களை திமுக அரசு கைவிட்டதே தற்போதைய வறட்சிக்கு காரணம். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் மீதமிருந்த 15 சதவீத பணிகளை நிறைவேற்றினால் 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். நிலவும் கடும் வறட்சியால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்கச் செல்வது சரியா?. இவ்வாறு அவர் கூறினார்.

பீர் முக்கியமா?

குடிநீர் தட்டுப்பாடு நிலைவும் வேளையில், குடிமகன்களுக்கு கோதுமை பீர் அறிமுகப் படுத்துவதாக அரசு சொல்கிறது? என நிருபர்கள் கேள்விக்கு, '' இது தான் நாட்டுக்கு முக்கியமா?. குடிநீர் முக்கியம் இல்லை.
பீர் தான் முக்கியம். எப்போதும் இந்த தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததோ?, மதுபானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதில் தான் அதிகமான வருமானம் கிடைக்கிறது. அதனால் அதில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள் என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.








      Dinamalar
      Follow us