ADDED : செப் 08, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின், தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில், ரவுடிகள், வழக்கறிஞர்கள் உட்பட 24 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.
இதில், முக்கியகுற்றவாளிகளான ராணிப்பேட்டையைச் சேர்ந்த பொன்னை பாலு, 39, சந்தோஷ், 22, கோகுல், 25, விஜய், 24; திருநின்றவூரைச் சேர்ந்தவர்கள் ராமு, 38, அருள், 32,செல்வராஜ், 49, ஆகியோர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், புளியந்தோப்பு திருமலை, 45, ஆர்.கே.பேட்டை மணிவண்ணன், 25, கள்ளிப்பட்டுடைச் சேர்ந்தசிவசக்தி, 26, ஆகிய 10 பேரும் குண்டர்தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.