sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூலித் தொழிலாளி கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

/

கூலித் தொழிலாளி கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

கூலித் தொழிலாளி கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

கூலித் தொழிலாளி கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை


ADDED : மே 09, 2024 11:40 PM

Google News

ADDED : மே 09, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கடனை திருப்பி கேட்ட தகராறில் கூலித்தொழிலாளி ஆனந்தகுமாரை 32, குத்திக் கொன்ற வழக்கில், 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரம் ஆனந்தகுமார்; நண்பர் தேவதானத்தை சேர்ந்த மருதுபாண்டி 24. மருதுபாண்டிக்கு ஆனந்தகுமார் ரூ.15 ஆயிரம் கடனாக கொடுத்திருந்தார். திரும்ப பெறுவதில் கருத்து வேறுபாடு, தகராறு ஏற்பட்டது.

2023 ஜன. 22 இரவு 8:00 மணிக்கு கடனை திருப்பி தருவதாக ஆனந்த குமாரை, தேவதானம் ஊருக்கு வரும் வழியில் உள்ள இசக்கி அம்மன் கோயில் அருகில் வரவழைத்து மருதுபாண்டி தகராறு செய்துள்ளார். நண்பர்கள் துணையுடன் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் மருதுபாண்டி, அவரது சகோதரர் கருப்பசாமி 28, நண்பர்கள் சுந்தரபாண்டியன் 23, விஜயராஜ் 23, அஜித்குமார் 23, முத்துகிருஷ்ணன் 22, மாசானம் 27, ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இதில் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us