ADDED : மார் 07, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று நுரையீரல் பரிசோதனை நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக, நேற்று காலை, 9:00 மணிக்கு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு நுரையீரல் செயல்பாடு தொடர்பான நவீன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சி.டி., ஸ்கேன் பரிசோதனையும் நடந்தது. அங்கிருந்து 10:00 மணிக்கு புறப்பட்டு, நேரடியாக தலைமைச் செயலகம் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது வழக்கமான பரிசோதனை என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.