காங்கேயம் நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
காங்கேயம் நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
ADDED : ஜூலை 06, 2024 07:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா ஆய்வு மேற்கொண்டனர்.
காங்கேயம் நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிமன்றம் கட்டப்பட உள்ள இடங்கள், நீதிபதிகள் குடியிருப்பு, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பெண் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களிடம் நீதியரசர் மஞ்சுளா ஆலோசனை மேற்கொண்டார். வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எஸ். சந்தான கிருஷ்ணசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ். மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.செந்தில்குமார், வழக்கறிஞர் சங்க தலைவர் என். கார்த்திகேயன், செயலாளர் எஸ். செல்வக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.