sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என் வழக்கில் நானே வாதாடுவேன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்ற மகாவிஷ்ணு

/

என் வழக்கில் நானே வாதாடுவேன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்ற மகாவிஷ்ணு

என் வழக்கில் நானே வாதாடுவேன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்ற மகாவிஷ்ணு

என் வழக்கில் நானே வாதாடுவேன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்ற மகாவிஷ்ணு

14


UPDATED : செப் 12, 2024 06:29 AM

ADDED : செப் 12, 2024 01:21 AM

Google News

UPDATED : செப் 12, 2024 06:29 AM ADDED : செப் 12, 2024 01:21 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'என் வழக்கில் நானே வாதாடுவேன்' என, ஜாமின் மனுவை, ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாபஸ் பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, 30. அவர், சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியிலும், அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், ஆற்றிய சொற்பொழிவுகள் சர்ச்சைக்குரியதாக அமைந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணை


இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரை, ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, ஜாமின் கோரி, மகாவிஷ்ணு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''என் வழக்கில் நானே வாதாடிக் கொள்கிறேன்,'' எனக் கூறிய மகாவிஷ்ணு, ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார்.

கேள்வி


இதையடுத்து, போலீஸ் காவல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, 'மகாவிஷ்ணுவிடம் ஏற்கனவே விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளீர்கள்; அதன் பிறகும் ஏழு நாள் காவலில் விசாரணை கோருவது ஏன்?' என, மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினர்.

அப்போது, 'மகாவிஷ்ணுவின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என அறிய வேண்டும். திருப்பூரில் உள்ள, அவரின் பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதால், அவரின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, மகாவிஷ்ணுவிடம், போலீஸ் காவல் விசாரணைக்கு சம்மதமா என, மாஜிஸ்திரேட் கேட்டார். அதற்கு அவர், 'எனக்கு எவ்வித ஆட்பேசனையும் இல்லை' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட், மகாவிஷ்ணுவை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us