sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆடல் - பாடல் நிகழ்ச்சியில் போலீசை தாக்கியவர் கைது

/

ஆடல் - பாடல் நிகழ்ச்சியில் போலீசை தாக்கியவர் கைது

ஆடல் - பாடல் நிகழ்ச்சியில் போலீசை தாக்கியவர் கைது

ஆடல் - பாடல் நிகழ்ச்சியில் போலீசை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 03, 2024 04:05 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோலார்பேட்டை : திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு, கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு திரியாலம் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் கோவிந்தராஜ், 44, 'ஒன்ஸ்மோர்' கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் போலீசார் அவரை வெளியேற்ற முயன்றபோது, தலைமைக் காவலர் கணேசனை தாக்கினார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us