ADDED : செப் 02, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் ஜவுளி கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ஜீவா அளித்த பேட்டி:
பாலியல் தொல்லை கொடுப்பது தவறானது. ஏற்கனவே, 'மீ - டூ' என குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. தொடர்ச்சியாக தற்போது புகார்கள் வெளிவருகின்றன. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருந்தால் நன்றாக இருக்கும். பல துறைகளில், பல விஷயங்கள் நடக்கின்றன.
நல்ல சூழலை வைத்துக்கொள்வது தான் நடிகர்களின் பணி. தமிழ் சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
'டிவி' நிருபர் ஒருவர், தொடர்ந்து இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதால், ஜீவா கடுமையான வார்த்தையால் அந்த நிருபரிடம் பேசினார்.
இதனால், அந்த நிருபர் ஜீவாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால், பரபரப்பு ஏற்பட்டது.