sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : ஜூன் 29, 2024 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2024 09:32 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 30, 1931

சென்னையில், துரைசாமி - செல்லம்மா தம்பதியின் மகனாக, 1931ல் இதே நாளில் பிறந்தவர் சடகோபன். இவர், செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தார். அதே பள்ளியில், இவரது தந்தையும் ஆசிரியராக இருந்தார். அவரிடம் படித்தவர் ஸ்ரீதர். இருவரும் நாடகங்களை எழுதி இயக்கினர்.

அழகப்பா செட்டியார் கல்லுாரியில் படித்த சடகோபன், ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்ற, ஸ்ரீதர் திரைப்பட இயக்குனரானார். பின், சடகோபனையும் ஸ்ரீதர் தன்னுடன் அழைத்துக்கொண்டார். ஸ்ரீதர் உருவாக்கிய, 'சித்ராலயா' நிறுவனம் தயாரித்த, 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில், 'சித்ராலயா கோபு'வாக மாறினார்.

தொடர்ந்து, 'காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், வீட்டுக்கு வீடு' உள்ளிட்ட படங்களுக்கு கதை,வசனம் எழுதிய கோபு, 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தில் இயக்குனரானார். 69 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியும், 27 படங்களை இயக்கியும் உள்ளார்.

இவர் எழுதிய கடைசி படம், பாட்டி சொல்லை தட்டாதே. 'மன்னார் அண்டு கம்பெனி, ஓஹோ புரொடக் ஷன்ஸ்'சின் உரிமையாளரான நகைச்சுவை எழுத்தாளரின் 93வது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us