sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்-26

/

தினமும் ஒரு பெருமாள்-26

தினமும் ஒரு பெருமாள்-26

தினமும் ஒரு பெருமாள்-26


ADDED : ஜன 09, 2025 06:47 PM

Google News

ADDED : ஜன 09, 2025 06:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கை சிறக்க...


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது சிந்துப்பட்டி. இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தரும் வெங்கடேசப் பெருமாளை தரிசித்தால் வாழ்க்கை சிறக்கும். புளியம்பழத்தை தெலுங்கில் சித்தப்பண்டு எனச் சொல்வர். இப்பகுதியில் அடர்ந்த புளிய மரங்கள் நிறைந்து இருந்ததால் சித்தப்பண்டூர் என அழைத்தனர். இதுவே தற்போது சிந்துப்பட்டி என மருவியுள்ளது. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்கு பிறகு திருப்பதி, அதை சுற்றியுள்ள பகுதிகள் அந்நியர்களின் வசமானது. இதனால் அப்பகுதி மக்கள் இங்கு வந்தனர்.

அப்போது தாங்கள் வழிபட்ட பெருமாள் சிலையையும் கொண்டு வந்துவிட்டனர். அவர்தான் இத்தலத்தில் அருள்பாலிக்கும் வெங்கடேசர். இங்கு கொடிக்கம்பத்தின் மீது கருடனுக்கு பதிலாக கருப்பண்ணசாமி காட்சி தருகிறார். வேண்டுதல் நிறைவேற இந்தக் கொடி மரத்திற்கு அபிேஷகம் செய்கின்றனர். விபூதி பிரசாதமாக தரப்படுகிறது.

திருமங்கலத்தில் இருந்து 15 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 96003 33058

அருகிலுள்ள தலம்: உசிலம்பட்டி சொக்கலிங்க சுவாமி 10 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 11:00 மணி மாலை 5:00 - 7:00 மணி






      Dinamalar
      Follow us