தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்: மழை கொட்ட போகுதாம்!
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட்: மழை கொட்ட போகுதாம்!
ADDED : மே 21, 2024 01:36 PM

சென்னை: கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 21) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 21) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் 'ஆரஞ்சு' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மே 23ம் தேதி
தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மே 23ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

