sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்

/

பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்

பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்

பலாப்பழத்தை வைத்து வழிபட்ட பன்னீர்செல்வம்

4


ADDED : ஜூன் 03, 2024 06:36 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 06:36 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் உள்ள தன் குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலில் முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளருமான பன்னீர்செல்வம், தன் தேர்தல் சின்னமான பலாப்பழத்தை வைத்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தார்.

நேற்று காலை 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்த பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். கோவிலில் கொடி மரத்தை வணங்கி, ஆண்டாள் சன்னிதியில் தரிசனம் செய்துவிட்டு பிரகாரம் சுற்றி வந்தார். பின், வடபத்திர சயனர் கோவிலில் ஆண்டாள் நந்தவனம், சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள் சன்னிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின், தன் குலதெய்வமான செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு, அம்மன் காலடியில் பலாப்பழத்தை வைத்து வழிபட்டார். பின், கும்பாபிஷேகம் நடந்த வைத்தியநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us