sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டில் நின்றிருந்த காருக்கு கேரளாவில் 'பாஸ்டேக் பீஸ்'

/

வீட்டில் நின்றிருந்த காருக்கு கேரளாவில் 'பாஸ்டேக் பீஸ்'

வீட்டில் நின்றிருந்த காருக்கு கேரளாவில் 'பாஸ்டேக் பீஸ்'

வீட்டில் நின்றிருந்த காருக்கு கேரளாவில் 'பாஸ்டேக் பீஸ்'


ADDED : ஜூன் 03, 2024 04:07 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் வீட்டில் நின்றிருந்த காருக்கு கேரள மாநிலம், திருச்சூர் -அங்கமாலி வழித்தடத்தில் உள்ள டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டணம் எடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவலை பார்த்து கார் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்துார் பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஞானராஜ், 60; அரசு பள்ளி தலைமை ஆசிரியர்.

இவரது கார், மே 29ல் வீட்டில் இருந்துள்ளது. மே 30 அதிகாலை, 2:10 மணிக்கு கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து அங்கமாலி வழியாக செல்லும் வழித்தடத்தில் பலியக்காரா டோல்கேட்டை கார் கடந்து சென்றதாகவும், அதற்கான கட்டணம், 90 ரூபாய் கழிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மொபைல் போனுக்கு தகவல் வந்துள்ளது.

தன் கார், ஸ்ரீவில்லிபுத்துாரில் வீட்டில் இருக்கும் நிலையில் கேரள மாநிலத்தில் டோல்கேட் கட்டணம் கழிந்துள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.

தன் பாஸ்டேக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா என, குழப்பம் அடைந்துள்ளார். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைனில் போலீசில் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us