மத்திய அரசு மீது பழி போடுவதை மக்கள் ஏற்கவில்லை: வாசன் பேச்சு
மத்திய அரசு மீது பழி போடுவதை மக்கள் ஏற்கவில்லை: வாசன் பேச்சு
UPDATED : ஜூலை 20, 2024 01:22 PM
ADDED : ஜூலை 20, 2024 11:55 AM

சென்னை: எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போடுவதை மக்கள் ஏற்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: சிறு, குறு தொழில்களுக்கான மின்கட்டணத்தை, தி.மு.க., அரசு 3வது முறையாக உயர்த்தி உள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?.
நம்ப தயாராக இல்லை
மக்கள் தலையில் சுமையை ஏற்றி, அவர்களை ஏமாளியாக்க நினைக்கிறார்கள்.இனிவரும் காலங்களில் தி.மு.க.,வினரை நம்ப வாக்காளர்கள் தயாராக இல்லை. தி.மு.க.,அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் குடிநீர் வரி மற்றும் மின்சார வரி உள்ளிட்டவற்றை உயர்த்தி உள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போடுவதை மக்கள் ஏற்கவில்லை.
அரசின் தந்திரம்
தமிழக மின்சார வாரியத்தின் கடன் சுமைக்கு தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு தான் காரணம். இது அரசின் தந்திரம் என்பதை மக்கள் உணர வேண்டும். மின்கட்டணம் உயர்வு தொடர்பாக, வரும் திங்கள் கிழமை மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுக்க உள்ளோம். தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசே காரணம். தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.