sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வெறுப்பு அரசியலை மக்கள் சகிக்க மாட்டார்கள்'

/

'வெறுப்பு அரசியலை மக்கள் சகிக்க மாட்டார்கள்'

'வெறுப்பு அரசியலை மக்கள் சகிக்க மாட்டார்கள்'

'வெறுப்பு அரசியலை மக்கள் சகிக்க மாட்டார்கள்'

3


ADDED : மார் 11, 2025 05:03 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:03 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை:

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளை, முன்னுக்குப் பின் முரணாக மாற்றிக்கூறி, தி.மு.க., அரசு மக்கள் மத்தியில் பிரிவினையை துாண்டி வருகிறது. ஹிந்தி திணிப்பு என்ற தங்களின் கூட்டு நாடகம் பெரும் தோல்வி அடைந்து விட்டதன் விளைவாக, அனைத்து அறிவாலய தலைவர்களும், உச்சக்கட்ட பதற்றத்தில் இருப்பதாக தெரிகிறது.

அதனால்தான், கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை திரித்து, கட்டுக்கதை கட்டி மக்களை திசை திருப்பி, தங்கள் அரியணையை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாக, தி.மு.க., அரசு கடிதம் எழுதியதை, மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி விட்டார் என்ற அச்சத்தில் தான், மத்திய அமைச்சர் குறித்த பொய்யான வதந்தியை பரப்ப, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று உடனுக்குடன் முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தி.மு.க., அரசு என்னதான் தகிடுதத்தம் செய்தாலும், அவர்களின் வெறுப்பு அரசியலை மக்கள் இனி சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us