sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ரவி பெருமிதம்

/

ராமராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ரவி பெருமிதம்

ராமராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ரவி பெருமிதம்

ராமராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி: கவர்னர் ரவி பெருமிதம்

23


ADDED : ஆக 12, 2024 07:37 PM

Google News

ADDED : ஆக 12, 2024 07:37 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ராமராஜ்ஜியம் ஆட்சி நடத்துகிறார் என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் வர்த்தினி மகாலில் நடந்த ராமேஸ்வரம் கம்பன் கழகத்தின் 35ம் ஆண்டு விழாவில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன் வரவேற்று பேசினார். விழாவில் கம்பனில் இலக்கியத்தாக்கம் எனும் நூலை கவர்னர் வெளியிட, இலங்கை கம்பன் கழக தலைவர் ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்.

பின் கவர்னர் ரவி பேசியதாவது :கம்பர் ஒரு சித்தர், மகரிஷி, புரட்சியாளர் என கூறலாம். பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில் ராமாயணம் மூலம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன்படி வாழ்ந்தார்கள். ஸ்ரீ ராமர் ஆட்சி காலத்தில் அவர் நல்ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்ததால் தான், இந்தியா சிறந்த நாடாக உள்ளது. இதனை மையமாக வைத்து தான் நம் அரசியல் சாசனமும் உருவானது.

ராமாயணத்தின் வரலாற்றை பாமர மக்களும் எளிதில் தெரிந்திடும் வகையில் கம்பர் வடிவமைத்தார்.

தற்போது பிரதமர் மோடி ராமராஜ்ஜியம் ஆட்சியை நடத்துகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி பணிபுரிகிறார். சில வெளிநாடு தீய சக்திகள் நம்மை ஆரியர், திராவிடர்கள் என பிரித்தாள நினைக்கிறார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு நம் நாடு தான். இதில் யாரும் உரிமை கோர முடியாது. இதனையே பிரதமர் மோடியும் பின்பற்றி அனைத்து துறைகளையும் கட்டமைத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இன்று உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. வருங்காலத்தில் இந்தியா அனைத்து துறைகளையும் வளர்ச்சி அடையும். புனித நகரான இங்கு ராமர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்ந்த பகுதியில் பிரதமர் மோடியும் சுவாமி தரிசனம் செய்துள்ளார் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us