sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு

/

பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு

பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு

பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு

8


ADDED : பிப் 25, 2025 03:44 AM

Google News

ADDED : பிப் 25, 2025 03:44 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளுக்கு, 471 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டம், 'பி.எம்.கிஸான்' என்ற பெயரில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், மூன்று தவணைகளாக, தலா 2,000 ரூபாய் வீதம், ஆண்டுதோறும் 6,000 ரூபாய், விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 19வது தவணை நிதியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். நாடு முழுதும் உள்ள 9.80 கோடி விவசாயிகளுக்கு, 22,000 கோடி ரூபாய், நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 22.5 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், 471 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us