sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊட்டியில் பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: எஸ்.பி மன்னிப்பு கேட்ட பின் போராட்டம் வாபஸ்

/

ஊட்டியில் பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: எஸ்.பி மன்னிப்பு கேட்ட பின் போராட்டம் வாபஸ்

ஊட்டியில் பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: எஸ்.பி மன்னிப்பு கேட்ட பின் போராட்டம் வாபஸ்

ஊட்டியில் பா.ஜ., தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி: எஸ்.பி மன்னிப்பு கேட்ட பின் போராட்டம் வாபஸ்

8


UPDATED : மார் 25, 2024 04:10 PM

ADDED : மார் 25, 2024 02:53 PM

Google News

UPDATED : மார் 25, 2024 04:10 PM ADDED : மார் 25, 2024 02:53 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி: ஊட்டியில் பா.ஜ., வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, வெளியில் இருந்த தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், சில தொண்டர்கள் காயமுற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச் 25) பா.ஜ., தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் தொண்டர்களை நோக்கி தடியடி நடத்தினர். இதனால் பா.ஜ., தொண்டர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.Image 1249178போலீசாரின் தடியடியில் சில பா.ஜ., தொண்டர்கள் காயமுற்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாநில தலைவர் அண்ணாமலை, ''ஊட்டி எஸ்.பி சுந்தர வடிவேல் பணியிடை நீக்கம் செய்யும்வரை போராட்டம் தொடரும்'' எனக் கூறி எல்.முருகன் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.Image 1249179போராட்டத்தின்போது எஸ்.பி சுந்தரவடிவேல், தடியடி தொடர்பாக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்த அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று காயமுற்ற தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.






      Dinamalar
      Follow us