sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய் மீது போலீசில் புகார்

/

விஜய் மீது போலீசில் புகார்

விஜய் மீது போலீசில் புகார்

விஜய் மீது போலீசில் புகார்

2


ADDED : மார் 11, 2025 06:10 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:10 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'இப்தார் நோன்பு நிகழ்ச்சியை சீர்குலைத்த நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று தமிழ்நாடு சுன்னத் ஜமா-அத் அமைப்பின் மாநில பொருளாளர் செய்யது கவுஸ் அளித்துள்ள புகார்:

கடந்த, 7 ம் தேதி, சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடந்த, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் பங்கேற்றார். அப்போது, கொஞ்சமும் மனிதத்தன்மையே இல்லாமல், நோன்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள் மீது, பாதுகாவலர்கள் தாக்கி உள்ளனர்.

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது மிகவும் கண்ணியமானது. இந்நிகழ்ச்சியை மாநாடு, பொதுக்கூட்டங்கள் போல நடத்தக்கூடாது.

ஆனால், விஜய் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில், நோன்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ரவுடிகள், குடிகாரர்கள் பங்கேற்றது, முஸ்லிம்களை கேவலப்படுத்தியதாக, தமிழ்நாடு சுன்னத் ஜமா-அத் அமைப்பு உணர்கிறது.

இனியும் இதுபோன்ற அத்துமீறல் செயல்கள் நடக்காமல் இருக்க, விஜய் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us