ADDED : மே 10, 2024 05:57 AM
மதுரை: மதுரையில் சகோதரர் குடும்பத்தினரை தாக்கிய வழக்கில் அரசியல் பிரமுகரான செல்லத்துரையை 66, போலீசார் கைது செய்தனர்.
மதுரை வடக்கு மாசிவீதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை என்ற மார்க்கெட் செல்லத்துரை. சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க., தி.மு.க.,வில் இருந்தவர்.
இவரது சகோதரர் குமரபாண்டி 48. இவர்களின் குடும்ப சொத்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மதியம் செல்லத்துரையை பார்க்க குமரபாண்டி சென்றுள்ளார்.
இருவருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்லத்துரை, அவரது மகன் செந்தில்குமார், வேலையா ஆகியோர் குமரபாண்டி, அவரது மனைவி, அவரது அண்ணன் திருப்பதியின் மனைவி ஆகியோரை தாக்க முயன்றனர். கத்தியால் தாக்கியதில் குமரபாண்டியன் மனைவி காயமடைந்தார்.
திலகர் திடல் செல்லதுரையை கைது செய்தனர்.