sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ச்சி

/

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! புதுப்பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ச்சி

6


ADDED : ஜன 14, 2025 07:56 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:56 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் எழுந்த மக்கள், நீராடி, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். பின்னர், சூரியனை வணங்கி, கரும்புகள் வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். வீடுகள் முன்பு, வாசல்களில் பல வண்ண கோலமிட்டு, புத்தம் புது பானைகளில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு பெண்கள் மகிழ்ந்தனர்.

உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் கரும்புகளை சுவைத்து, பொங்கல் விளையாட்டுகளை விளையாடி உற்சாகம் அடைந்தனர்.

நகரப் பகுதிகளில் குடியிருப்போர் சங்கங்களிலும், கிராமங்களில் ஊர் பொது இடங்களிலும் பொங்கல் முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us