sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொன்முடி வழக்கில் செப்., 9ல் விசாரணை

/

பொன்முடி வழக்கில் செப்., 9ல் விசாரணை

பொன்முடி வழக்கில் செப்., 9ல் விசாரணை

பொன்முடி வழக்கில் செப்., 9ல் விசாரணை


ADDED : ஆக 20, 2024 04:22 AM

Google News

ADDED : ஆக 20, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடி விடுதலை உத்தரவை, ஆய்வு செய்யும் விதமாக எடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, செப்., 9க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து, வேலுார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இவ்வழக்கில், ஏப்ரல் 15 முதல் 19 வரை விசாரணை மேற்கொள் வதாக நீதிபதி அறிவித்திருந்தார். பின், விசாரணை ஜூன் 18க்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், விசாரணை நடக்கவில்லை.

இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பொன்முடி தரப்பில் அவகாசம் கோரியதை தொடர்ந்து, விசாரணையை செப்., 9க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.






      Dinamalar
      Follow us