sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துறைமுக ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்

/

துறைமுக ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்

துறைமுக ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்

துறைமுக ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்


ADDED : ஆக 27, 2024 01:08 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: நாடு முழுதும், 12 பெரிய துறைமுகங்களின் ஊழியர்கள், நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

துாத்துக்குடியில், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க செயலர் ரசல், ஐ.என்.டி.யூ.சி, அமைப்பு செயலர் கதிர்வேல் மற்றும் எச்.எம்.எஸ்., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட துறைமுக தொழிற்சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது:

நாடு முழுதும் உள்ள துறைமுகங்களில் பணிபுரியும், மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவு ஊழியர்களுக்கு, 2022 ஜனவரி முதல் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இதற்காக அமைக்கப்பட்ட குழு ஏழாம் கட்ட பேச்சு நடத்தியும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

லாபம் ஈட்டக்கூடிய பெரிய துறைமுகங்கள் மற்றும் துறைமுகங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

ஒப்பந்த ஊழியர்களை துறைமுக ஊழியர்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, கோல்கட்டா, மும்பை, கொச்சி.

எண்ணுார் உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், நாளை காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இன்று ஊதிய ஒப்பந்த பேச்சு நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us