ADDED : ஜூன் 18, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விரும்பினால், தபால் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வீட்டிலிருந்தபடி ஓட்டளிக்க விரும்பினால், அவர்கள் விருப்பத்தை பரிசீலித்து, அவர்கள் தபால் ஓட்டளிக்க, தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.