sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

40,000 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

/

40,000 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

40,000 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

40,000 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை


ADDED : மே 11, 2024 08:15 PM

Google News

ADDED : மே 11, 2024 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் சமீபத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 53,152 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, உளவியல் ரீதியான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், 104 மற்றும் 14416 உதவி மைய கட்டுப்பாட்டு அறைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான பணிகளில், 100 மனநல ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்பட்டு, ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

அதன்படி, பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதில், 130க்கும் மேற்பட்ட தீவிர மன அழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து, தொடர் உளவியல் ஆலோசனை தரப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில், அரசு மனநல மருத்துவ மையங்களின் வாயிலாகவும் உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்போது, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்கப்படும்.

- ககன்தீப் சிங் பேடி,

மக்கள் நல்வாழ்வு துறை செயலர்






      Dinamalar
      Follow us