sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கத்திரி வெயில் இன்று துவக்கம் 6 மாவட்டங்களுக்கு 7ல் மழை

/

கத்திரி வெயில் இன்று துவக்கம் 6 மாவட்டங்களுக்கு 7ல் மழை

கத்திரி வெயில் இன்று துவக்கம் 6 மாவட்டங்களுக்கு 7ல் மழை

கத்திரி வெயில் இன்று துவக்கம் 6 மாவட்டங்களுக்கு 7ல் மழை


ADDED : மே 04, 2024 12:31 AM

Google News

ADDED : மே 04, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் இன்று துவங்குகிறது. வரும், 28ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என்றும், வரும் 7ம் தேதி, ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திர காலம் துவங்கினால், கோடை மழை மற்றும் திடீர் மேக வெடிப்பு மழை, இடி, மின்னல் மழை, ஆலங்கட்டி மழை போன்றவை பெய்வது வழக்கம். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பாரூர், மேலாலத்துார், பையூர் ஆகிய இடங்களில், தலா, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

கனமழை வாய்ப்பு


வரும் நாட்களுக்கான நிலவரம் குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகம் வரை பலத்த காற்று வீசுவதுடன், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்துார் மற்றும் வேலுார் மாவட்டங்களில், வரும் 7ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில், 44 டிகிரி செல்ஷியஸ் வரையிலும், சில மாவட்டங்களில், 40 டிகிரி செல்ஷியஸ் வரையிலும் வெயில் பதிவாகும். கடலோரம் அல்லாத வட மாவட்டங்களில், சில இடங்களில் வெப்ப அலை வீசும். தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, வரும் 6ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்ப நிலை மாறுபாடு ஏன்?


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:

சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில், மற்ற மாவட்டங்களை விட வெப்பநிலை குறைவாக பதிவாகிறது. ஆனால், வளி மண்டலத்தில் வெப்பத்துடன் கூடிய ஈரப்பதம் இருப்பதால், உஷ்ணமாக, புழுக்கமாக காணப்பட்டு, அசவுகரியமாக இருக்கும்.

கடலோரத்தில் கடற்காற்றும் தரைக்காற்றும் இணைந்து, வெப்ப அளவை தீர்மானிக்கின்றன. கடலோரம் அல்லாத மாவட்டங்களில், நிலப்பகுதியில் மண்ணின் வெப்பம், அந்த பகுதியின் வெப்பமாக தீர்மானிக்கப்படும்.

அதேபோல, மலைப் பகுதிகளில், முற்பகலில் பாறைகள், மலைகள் வெப்பத்தை உள்வாங்கி, மாலை நேரங்களில் அது நிலப்பகுதியில் பரவுவதால், இரவு வரையிலும் வெப்பமான சூழல் நிலவுகிறது.

கோடை வெயிலின் போது, வெவ்வேறு திசைகளில் காற்று வீசி, அது சந்திக்கும் இடங்களில், மேகக்கூட்டங்கள் உருவாக வாய்ப்பிருந்தால், அந்த பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us