sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-14

/

ரம்ஜான் சிந்தனைகள்-14

ரம்ஜான் சிந்தனைகள்-14

ரம்ஜான் சிந்தனைகள்-14


ADDED : மார் 14, 2025 06:53 PM

Google News

ADDED : மார் 14, 2025 06:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோயாளிகள் கவனிக்க...


நான் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். உடல் அசதியாக உள்ளது. என்னால் தொழ முடியாது என சொல்வதை முடிந்தளவு தவிருங்கள். அது போல் நோயாளியைப் பார்க்க சென்றாலும் அவரிடம் தொழுகை செய்யும்படி அறிவுறுத்துங்கள்.

* நோய்க்கு பரிகாரம் தேடுங்கள். இறைவன் மருந்தை படைத்து தயாராக வைத்துள்ளான்.

* நோய் என்பது அவனின் சோதனையாகும். அதைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப் படுத்துகிறான்.

* ஒருவர் நோயாளியாகி விடுகிறார். அப்போது நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு ஒரு கட்டளை வரும். 'இவன் முன்பு சுகமாக இருக்கும்போது செய்த நற்செயல்களின் நன்மைகள் இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கட்டும்' என்பதே அது.

* எவரேனும் ஒருவர் நோயாளியை சந்திக்கச் சென்றால், வானத்தில் இருந்து ஒரு அழைப்பாளர் குரல் கொடுப்பார். 'நீங்கள் நல்லவர். உமது நடையும் நல்லது. நீங்கள் சொர்க்கபதியில் ஒரு வீட்டைச் சம்பாதித்துக் கொண்டீர்' என சொல்வார்.

* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி






      Dinamalar
      Follow us