sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு; துப்பாக்கியால் எச்சரித்த இலங்கை கடற்படை

/

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு; துப்பாக்கியால் எச்சரித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு; துப்பாக்கியால் எச்சரித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு; துப்பாக்கியால் எச்சரித்த இலங்கை கடற்படை

1


ADDED : ஜூலை 08, 2024 06:58 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 06:58 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் எச்சரித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

நேற்று முன்தினம் (ஜூலை 6) ராமேஸ்வரத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், வழக்கம்போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.

அங்கு ரோந்துக்கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் தங்கள் பகுதி எனக்கூறி துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் கைதுக்கு பயந்த மீனவர்கள், கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்து புறப்பட்டனர்.

பின் இந்திய எல்லைப்பகுதியில் மீன் பிடித்த நிலையில் பெரும்பாலான படகுகளுக்கு மீன்வரத்து இன்றி தொழில் நஷ்டத்துடன் நேற்று காலை கரை திரும்பியுள்ளனர்.

இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்பட்டு கைதாகும் நிலையில், தற்போது இலங்கை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்தது மீனவர்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us