நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கடந்த ஜூலை 12ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து, இந்திய துாதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேச்சு நடத்தினர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரையும் விடுவிக்க, இலங்கை நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது. அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.