sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுப்பதிவு இயந்திரம் சில இடங்களில் பழுது! சில நிமிடங்களில் சீரானது !

/

ஓட்டுப்பதிவு இயந்திரம் சில இடங்களில் பழுது! சில நிமிடங்களில் சீரானது !

ஓட்டுப்பதிவு இயந்திரம் சில இடங்களில் பழுது! சில நிமிடங்களில் சீரானது !

ஓட்டுப்பதிவு இயந்திரம் சில இடங்களில் பழுது! சில நிமிடங்களில் சீரானது !

4


ADDED : ஏப் 19, 2024 09:40 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 09:40 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் இன்று(ஏப்.,19) காலை 7:00 மணிக்கு லோக்சபா முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் சில இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. சில நிமிடங்களில் சரியானது. அதன் விபரம் பின்வருமாறு:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பூத் எண் 235ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் சின்னம் சரி வர தெரியவில்லை என வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, சரி செய்தனர்.

விளாத்திக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 203 ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது அடைந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பிரச்னை சரி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டி .டி .ஏ. பள்ளி ஓட்டு சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது அடைந்தது. அரை மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டது.

சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டது.

விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, 20 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

ஆத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சி.எஸ்.ஐ பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. 20 நிமிடங்களுக்கு பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது சரி செய்யப்பட்டது.

சென்னை சாலிகிராமம் பத்மா சாரங்கபாணி பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக, 1.45 நிமிடங்கள் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

மாதிரி ஓட்டுப்பதிவு



திருப்பூர் லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாதிரி ஓட்டுப்பதிவிலேயே, 5 பேலட் யூனிட் ; 8 கன்ட்ரோல் யூனிட் ; 18 வி. வி. பேட் என மொத்தம் 31 இயந்திரங்கள் பழுது காரணமாக மாற்றப்பட்டன. தற்போது ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டு ஓட்டுப் பதிவு நடக்கிறது.






      Dinamalar
      Follow us