sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலில் மூழ்கி பலியான மீனவர் உடல் மீட்பு

/

கடலில் மூழ்கி பலியான மீனவர் உடல் மீட்பு

கடலில் மூழ்கி பலியான மீனவர் உடல் மீட்பு

கடலில் மூழ்கி பலியான மீனவர் உடல் மீட்பு


ADDED : ஜூன் 17, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூன் 17, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் மூழ்கிய படகில் சிக்கி இருந்த மீனவர் உடலை 2 நாட்களுக்கு பின் மரைன் போலீசார் மீட்டனர்.

ஜூன் 14ல் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சுதர்சன் என்பவரது விசைப்படகு சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியது. இதில் இருந்த 5 மீனவர்கள் கடலில் நீந்தி தத்தளித்த நிலையில் அவ்வழியாக மீன்பிடித்து வந்த மற்றொரு படகின் மீனவர்கள் உயிருக்கு போராடிய மீனவர்கள் பிரசாந்த், முகமது ஹனிபாவை மீட்டு மண்டபம் கரைக்கு கொண்டு வந்தனர். ஜூன் 15ல் உயிரிழந்து கடலில் மிதந்த மீனவர்கள் ஆரோக்கியம், பரக்கத்துல்லா உடலை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீட்டனர். காணாமல் போன மீனவர் கலீல் ரகுமானை 36, மீனவர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் பலியான கலீல்ரகுமான் உடல் மூழ்கிய படகில் சிக்கி இருப்பதாக சக மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மண்டபம் மரைன் போலீஸ் எஸ்.ஐ., யாசர் மவுலானா தலைமையில் ஸ்கூபா டைவிங் வீரர்கள் நடுக்கடலுக்கு சென்று மூழ்கிய படகில் சிக்கி இருந்த கலீல் ரகுமான் உடலை மீட்டு மண்டபம் கொண்டு வந்தனர்.






      Dinamalar
      Follow us