ADDED : ஜூன் 29, 2024 01:12 AM

பெரம்பலுார்:தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் ரெட்டியார் சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ரெட்டியார் சமுதாய மக்கள் ஹோட்டல்கள் நடத்தி வசதியான வாழ்க்கை நடத்துவதாக பேசினார்.
இது தொடர்பாக, சபையிலேயே மன்னிப்பு கேட்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்திச் சொன்னதன் பேரில், சபையிலேயே மன்னிப்புக் கோரி தன் வருத்தத்தை பதிவு செய்தார் அமைச்சர் கண்ணப்பன்.
அதன்பின்பும், இந்தப்பிரச்னை 'நீறுபூத்த நெருப்பாக' கனன்று கொண்டே இருக்கிறது. ரெட்டியார் சமூக மக்கள், தங்கள் சமூகம் குறித்து விமர்சித்த கண்ணப்பனுக்கு எதிராக தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு மேட்டூர் ரெட்டி நலச்சங்க பொருளாளர் நீலகண்டன் கூறியதாவது:
ரெட்டியார் சமூகம் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டசபையில் பேசியது உண்மைக்கு புறம்பானது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தமிழகம் முழுதும் விவசாயம் செய்து பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில், இன்றைக்கும் வறுமையில் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.