sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் கடற்கரையில் குவியும் கடல் புற்கள்; கோடை வெயில் எதிரொலி

/

ராமேஸ்வரம் கடற்கரையில் குவியும் கடல் புற்கள்; கோடை வெயில் எதிரொலி

ராமேஸ்வரம் கடற்கரையில் குவியும் கடல் புற்கள்; கோடை வெயில் எதிரொலி

ராமேஸ்வரம் கடற்கரையில் குவியும் கடல் புற்கள்; கோடை வெயில் எதிரொலி


ADDED : மே 06, 2024 11:34 PM

Google News

ADDED : மே 06, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : சுட்டெரிக்கும் கோடை வெயில் வெப்பத்தால் கடலுக்குள் வளரும் புற்கள் வெளியேறி ராமேஸ்வரம் கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ளன.

கோடை காலமான ஏப்., மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். இக்காலத்தில் பாக்ஜலசந்தி கடலுக்குள் வளரும் கடல் புற்கள் வெப்ப சலனத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் அதுவாக பெயர்ந்து கரை ஒதுங்குவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு கடலில் நிலவும் வெப்ப சலனத்தால் டன் கணக்கில் கடல் புற்கள் வெளியேறுகின்றன. சில நாட்களாக ராமேஸ்வரம் கடற்கரையில் 300 மீ., துாரத்தில் 4 அடி உயரத்திற்கு கடல் புற்கள் குவிந்துள்ளன. இதனால் மீனவர்கள் கடற்கரையில் இறங்கி விசைப்படகிற்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.

இதனை மீனவர்கள் கடல் பாசி என்றழைக்கின்றனர். சில நாட்களுக்குப் பின் தென்மேற்கு பருவக் காற்று வீசும்போது இவை கடற்கரை மேல் பரவி விடும். இதனால் கடற்கரையும் துாய்மை ஆகிவிடும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us