sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குட்கா விற்ற 17,550 கடைகளுக்கு 'சீல்' ; 33.28 கோடி ரூபாய் அபராதம் வசூல்

/

குட்கா விற்ற 17,550 கடைகளுக்கு 'சீல்' ; 33.28 கோடி ரூபாய் அபராதம் வசூல்

குட்கா விற்ற 17,550 கடைகளுக்கு 'சீல்' ; 33.28 கோடி ரூபாய் அபராதம் வசூல்

குட்கா விற்ற 17,550 கடைகளுக்கு 'சீல்' ; 33.28 கோடி ரூபாய் அபராதம் வசூல்

8


ADDED : ஆக 13, 2024 02:42 AM

Google News

ADDED : ஆக 13, 2024 02:42 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த, 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உறுதிமொழி ஏற்றார். பின், அவர் அளித்த பேட்டி:

இளைய சமுதாயத்தினரை போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில், முதல்வர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து, போதைபொருட்கள் விற்பனைக்கு எதிராக, உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துக்களை தடுப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த 2021 முதல் இதுவரை 8.66 லட்சம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகளில் பான்பராக், குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

அந்த கடைகளில், 21 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.86 லட்சம் கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் விளைவாக, 17,550 கடைகள் மூடி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இதில், அபராத தொகையாக, 33.28 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கூறினார்.

'சீல்' வைத்த பின் என்ன?

1பெட்டி கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், முதல் முறை, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, 15 நாட்களுக்கு கடைக்கு சீல் வைக்கப்படும். இரண்டாம் முறை, 50,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், ஒரு மாதம் கடை மூடப்படும். மூன்றாம் முறை, 1 லட்சம் ரூபாய் அபராதம்; மூன்று மாதங்கள் மூடி சீல் வைக்கப்படும். அதன்பின், போலீசில் புகார் அளிக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டு, உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.2பெரிய கடைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக விசாரணை நடத்தப்பட்டு, 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.



'சீல்' வைத்த பின் என்ன?

1பெட்டி கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், முதல் முறை, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, 15 நாட்களுக்கு கடைக்கு சீல் வைக்கப்படும். இரண்டாம் முறை, 50,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், ஒரு மாதம் கடை மூடப்படும். மூன்றாம் முறை, 1 லட்சம் ரூபாய் அபராதம்; மூன்று மாதங்கள் மூடி சீல் வைக்கப்படும். அதன்பின், போலீசில் புகார் அளிக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டு, உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.2பெரிய கடைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக விசாரணை நடத்தப்பட்டு, 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.








      Dinamalar
      Follow us