sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

/

விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

18


ADDED : ஏப் 25, 2024 05:55 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 05:55 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, தொடர்பாக விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்' என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று (ஏப்ரல் 25) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், ‛‛சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார். வழக்கை 3 மாதங்களில் முடிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிடப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீட்டிப்பு

செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு அடைந்தது. இந்நிலையில், 35வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us