sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கணவருக்கு பதில் வேறொருவர் உடல்! மனைவிக்கு இழப்பீடு தொகை எவ்வளவு? முடிவு செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

/

கணவருக்கு பதில் வேறொருவர் உடல்! மனைவிக்கு இழப்பீடு தொகை எவ்வளவு? முடிவு செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கணவருக்கு பதில் வேறொருவர் உடல்! மனைவிக்கு இழப்பீடு தொகை எவ்வளவு? முடிவு செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கணவருக்கு பதில் வேறொருவர் உடல்! மனைவிக்கு இழப்பீடு தொகை எவ்வளவு? முடிவு செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஜூலை 07, 2024 01:59 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கணவரின் உடலை ஒப்படைக்காமல், அடையாளம் தெரியாத உடலை ஒப்படைத்த விவகாரத்தில், கூடுதல் இழப்பீடு கேட்ட விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய, சுகாதார துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் பத்மினி; இவரது கணவர், 2008 நவம்பரில் விபத்தில் சிக்கினார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், இரண்டு நாட்களில் இறந்தார். பிரேத பரிசோதனைக்காக, பிணவறையில் உடல் வைக்கப்பட்டிருந்தது.

உடலை ஒப்படைக்கும் படி மனைவி கேட்ட போது, அடையாளம் தெரி யாத உடல் ஒப்படைக்கப் பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த பத்மினி, மருத்துவமனை டீனிடம் புகார் அளித்தார். பிணவறையில் ஏற்பட்ட குளறுபடியால், பத்மினியின் கணவர் உடல், வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, கணவரின் உடலை ஒப்படைக்காமல், அடையாளம் தெரியாத உடலை ஒப்படைத்ததற்காக, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, உயர் நீதிமன்றத்தில் பத்மினி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போதிய இழப்பீடு கோரி புதிதாக மனு அளிக்கவும், மன உளைச்சலை கருதி இழப்பீடு நிர்ணயிக்கவும், சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, சுகாதாரத்துறை செயலரிடம் பத்மினி மனு அளித்தார். இந்த மனுவை, துறையின் குழுவுக்கு செயலர் அனுப்பி வைத்தார். 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, அந்தக் குழு பரிந்துரைத்தது. இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க கோரி, மீண்டும் உயர் நீதிமன்றத்தை பத்மினி நாடினார்.

வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.கோவிந்தசாமி ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சுகாதாரத்துறை செயலர் இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும்படி, 2018ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தும், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

பத்மினி தரப்பை சுகாதாரத்துறை செயலர் கேட்கவில்லை. குழு நிர்ணயித்த தொகையை, அரசு ஏற்றுள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டும், சுகாதாரத்துறை செயலர் பின்பற்றவில்லை. எனவே, ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீண்டும் வலியுறுத்துகிறேன். மனுதாரர் அளித்த மறுஆய்வு மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறை செயலர், மனுதாரர் தரப்பை கேட்டு, ஆறு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us