ADDED : ஏப் 30, 2024 10:47 PM
சென்னை:பயணியரின் தேவை கருதி, சென்னை தாம்பரம் -- மேற்குவங்கம் மாநிலம், சந்த்ரகாச்சி இடையே, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
l தாம்பரத்தில் இருந்து மே 8, 15, 22, 29 மதியம் 1:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 9:20க்கு, மேற்கு வங்கம் மாநிலம், சந்த்ரகாச்சி சென்றடையும்
l சந்த்ரகாச்சியில் இருந்து மே 9, 16, 23, 30 இரவு 11:40க்கு புறப்படும் சிறப்பு ரயில், இரண்டாம் நாள் காலை 9:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்
l தாம்பரத்தில் இருந்து மே 9, 16, 23, 30 மதியம் 1:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 9:20க்கு சந்த்ரகாச்சியை சென்றடையும்
l சந்திரகாச்சியில் இருந்து மே 10, 17, 24, 31 இரவு 11:40க்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில், இரண்டாம் நாள் காலை 9:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி விட்டதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.