தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நாளை முதல் 'உயர்வுக்கு படி' சிறப்பு முகாம்

நாளை முதல் 'உயர்வுக்கு படி' சிறப்பு முகாம்

நாளை முதல் 'உயர்வுக்கு படி' சிறப்பு முகாம்


ADDED : செப் 01, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பிளஸ் 2 படித்த மாணவர்களில், உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர் கல்விக்கு ஊக்கப்படுத்தும் வகையில், 'உயர்வுக்குப் படி' என்ற நிகழ்ச்சி, நாளை துவங்கி, அக்., 1 வரை, பள்ளிகளில் நடக்க உள்ளது.

இந்த திட்டத்தை, உயர் கல்வி வழிகாட்டி குழு, பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர் குழு ஆகியவை செயல்படுத்த உள்ளன.

அவர்கள், பிளஸ் 2 தேறிய, தவறிய மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, தற்போதைய நிலையை கண்டறிந்து வருகின்றனர்.

அதில், பிளஸ் 2க்கு பின் படிப்பை கைவிட்ட மாணவர்களின் விபரங்களையும், அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகின்றனர்.

இதன் அடுத்தக்கட்டமாக, உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில், இந்நிகழ்ச்சி நடக்க உள்ளதாக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us