sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஸ்ரீரங்கம் கோவிலில் திடீர் போராட்டம்

/

ஸ்ரீரங்கம் கோவிலில் திடீர் போராட்டம்

ஸ்ரீரங்கம் கோவிலில் திடீர் போராட்டம்

ஸ்ரீரங்கம் கோவிலில் திடீர் போராட்டம்


ADDED : ஜூன் 08, 2024 02:01 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆரியபட்டாள் வாசல் அருகே கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை இருந்தது. அதை சில ஆண்டுகளுக்கு முன் கோவில் நிர்வாகம் நகர்த்தி வைத்தது. இதை கண்டித்தும், மீண்டும் பழைய இடத்தில் ஆஞ்சநேயர் சிலையை வைக்க வலியுறுத்தியும், திருமால் அடியார் குளம் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அந்த அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில், ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலையை பழைய இடத்தில் வைக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்று, 2 மணிநேரம் பக்திபாடல்கள் பாடியும், ஜால்ரா அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கோவில் நிர்வாகத்தினரும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். பின் அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து விட்டு, கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், ஸ்ரீரங்கம் கோவில் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.






      Dinamalar
      Follow us