sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்; தாசில்தார், போலீஸ்காரர் கைது

/

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்; தாசில்தார், போலீஸ்காரர் கைது

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்; தாசில்தார், போலீஸ்காரர் கைது

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்; தாசில்தார், போலீஸ்காரர் கைது

20


ADDED : மே 15, 2024 06:29 AM

Google News

ADDED : மே 15, 2024 06:29 AM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கம் - வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை, 40 அடி அகலம் உடையது. இந்த சாலையை ஆக்கிரமித்து, 13 வீடுகள் கட்டி உள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை மீட்டெடுக்க, சமூக ஆர்வலர் பொன்தங்கவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2023 செப்., மாதம், ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை மீட்டெடுக்க, மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சோழிங்கநல்லுார் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கடந்த 3ம் தேதி, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார இணை கமிஷனரிடம், பொன்தங்கவேல் மனு கொடுத்தார்.

நீதிமன்ற உத்தரவுபடி, மூன்று நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, அறிக்கை வழங்க வேண்டும் என, இணை கமிஷனர், மாநகராட்சி சிறப்பு தாசில்தார் சரோஜாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி, பொன்தங்கவேலை வீட்டுக்கு அழைத்த சரோஜா, ஆக்கிரமிப்பை அகற்ற 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அந்த சாலையை அகற்றினால், அதை ஒட்டியுள்ள பொன்தங்கவேல் மற்றும் வேறு சிலருக்கு சொந்தமான மனைகள் உள்ளன. அந்த இடங்களின் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது. அதை அறிந்த சரோஜா, பொன்தங்கவேலிடம் பேரம் பேசியுள்ளார்.

முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாய் தந்தால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்குவதாக, அவரிடம் கூறி உள்ளார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பொன்தங்கவேல் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., இம்மானுவேல் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று, ரசாயன பவுடர் துாவப்பட்ட 3 லட்சம் ரூபாயை, பொன்தங்கவேலிடம் கொடுத்து அனுப்பினர்.

அடையாறில் உள்ள வட்டார இணை கமிஷனர் அலுவலகத்தில், தாசில்தார் சரோஜாவிடம் பணம் கொடுக்க சென்றார். ஆனால் சரோஜா, பணத்தை வாங்காமல், தனக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவரிடம் தரும்படி கூறியுள்ளார்.

அவர் கூறியபடி, பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலக கார் ஓட்டுனரான போலீஸ்காரர் அருணிடம் அந்த பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், தாசில்தார் சரோஜாவைவும் கைது செய்தனர்.

லஞ்ச பணம் வாங்க உறுதுணையாக இருந்த சரோஜாவின் கணவர் பிரவீன் என்பவரை, போலீசார் தேடுகின்றனர். பிரவீன், அருணுடன் பணிபுரியும் சக போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us