தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜூன் 19, 2024 04:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினர் நேற்று தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.